ஹட்டன் – பொல்பிட்டிய மண் சரிவு: காணாமல் போன மூவரின் சடலங்களும் மீட்பு

2 months ago
tamilnewsline.com

ஹட்டன் – பொல்பிட்டிய, மொரஹேனகம பகுதியில் வீடு ஒன்றின் மீது மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் காணாமல் போன மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சடலங்களில் இரண்டு பெண்களும் ஆணொருவரும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கனமழையால் ஏற்பட்ட மண் சரிவின் காரணமாக இந்த அனர்த்தம் இடம்பெற்றதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தையடுத்து மீட்புப் பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது காணாமல் போயிருந்த மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.