ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை(28) ஆரம்பமாகிறது.
எதிர்வரும் 3ஆம் திகதி இலங்கை தொடர்பான தமது அறிக்கையை மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பெச்லெட் முன்வைக்கவுள்ளார்.
பின்னர் அதுகுறித்த விவாதம் இடம்பெறும்.
இந்தமுறை இலங்கை தொடர்பான பிரேரணை எதுவும் முன்வைத்து நிறைவேற்றப்பட மாட்டாது.
