தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், டுவிட்டர் பதிவொன்றை இட்டுள்ளார்.
இதில், அரச புலனாய்வு பிரிவினைச் சேர்ந்த அதிகாரி என்று கூறி, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞரணி உதவி செயலாளர் நிதன்ஷனை வெள்ளை வானில் வந்த சிலர் கடத்த முற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கல்முனை காவல்துறையில் இது தொடர்பான முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
