இன்றோ நாளையோ எரிபொருள் விலை கூடலாம் – ஜே.வி.பி

4 years ago
Sri Lanka
(71 views)
aivarree.com

இலங்கையில் எரிபொருள் விலையானது ‘இன்றோ நாளையோ’ கூடக்கூடியசாத்தியம் இருப்பதாக ஜேவிபியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாதெரிவித்துள்ளார். 

நாட்டில் எரிபொருள் நிறைவடைந்துவிடக் கூடாது என்ற நிலைப்பாட்டில்அரசாங்கம் இருக்கிறது. 

அவ்வாறு நிறைவடைந்து விட்டால் அதனை இறக்குமதி செய்வதற்கு போதுமானடொலர் அரசாங்கத்தின் வசம் இல்லை.

ஆகவேதான் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள்வழங்கப்படுவதைக் கட்டுப்படுத்தியுள்ளது. 

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் இன்றோ அல்லது நாளையோ எரிபொருள் விலையைஅதிகரித்தாலும் ஆச்சரியம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.