பல்வேறு விடயங்கள் தொடர்பாக தமிழ் கட்சிகள் ஒன்றுகூடி ஆராயவுள்ளன.
புதன்கிழமை பிற்பகல் 2 கட்டங்களாக யாழ்ப்பாணத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜெனீவா மனித உரிமைகள் மாநாடு ஆரம்பமாகவுள்ள நிலையில் அது தொடர்பாக மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் அனுப்பவது குறித்து முதலில் ஆராயப்படவுள்ளது.
அதேநேரம் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவது சம்பந்தமாக சர்வதேசத்துக்கு கடிதம் அனுப்புவது குறித்தும் ஆராயப்படவுள்ளது.
