பயங்கரவாத தடைச்சட்டம் சம்பந்தமான அரசாங்கத்தின் திருத்தங்கள் குறித்து சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான விடயங்கள்
சர்வதேசத்தை ஏமாற்றும் வகையில் திருத்தங்களை முன்வைக்காமல் அரசாங்கம் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வேண்டும்.
பயங்கரவாத தடை சட்டம் மீதான திருத்தங்களை அரசாங்கமே பெரிதுவக்குகின்ற போதும் ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் நிராகரித்தது.
இந்த திருத்தங்கள் யாவும் சர்வதேச தரத்திற்கு அமைவாக இல்லை.
ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக் கொள்ளும் நோக்கில் அரசாங்கம் இந்த திருத்தங்களை முன்மொழிகிறது.
உண்மையில் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக் கொள்ள வேண்டுமாக இருந்தால் அரசாங்கம் சர்வதேச தரத்திற்கு அமைவாக இந்த சட்டங்களை திருத்தவும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கவும் வேண்டும்.
