லங்கா பிரீமியர் லீக் தொடரின் இரண்டாம் பதிப்பு கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்தது.
இதில் இரண்டாவது தடவையாகவும் ஜஃப்னா கிங்ஸ் கிண்ணத்தை வென்றது.
இந்த தொடரில் விளையாடிய கிரிக்கட் வீரர் ஒருவரை, ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடுத்தும் நோக்கில் இலங்கையின் முன்னணி மாணிக்கக் கல் வியாபாரி ஒருவரின் மகனும் அவரது நண்பரும் அணுகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சின் மோசடி எதிர்ப்பு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
