ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததன் காரணமாக, சர்வதேச கால்பந்து சம்மேளனம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கால்பந்து சம்மேளனம் என்பன ரஷ்யாவை தடை செய்துள்ளன.
இந்தநிலையில் இந்த மாதம் போலாந்து எதிரான உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் விளையாட முடியாத நிலை ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த தடையை நீக்க கோரி, உலக விளையாட்டு மேன்முறையீட்டு நீதிமன்றில் ரஷ்யா முறைப்பாடு செய்துள்ளது.
ரஷ்யாவின் முறைபாடு குறித்த தீர்மானம் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
