இவ்வருடம் தேர்தல் நடத்தப்படலாம் எனவும் அது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலாக அமைய வாய்ப்பு இருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
‘மக்களின் இறையாண்மை பலம் என்பது வாக்குகளாகும்.
இந்நிலையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரினால் ஒரு வருடம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த ஆண்டு செப்டம்பர் 20ஆம் திகதிக்குப் பிறகு ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வரும்.
தேர்தலை நடத்த, ஆணைக்குழு என்ற வகையில், எந்த நேரத்திலும் தயாராக உள்ளோம்’ என்றார்.
