தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு சட்ட மா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து, இந்த வழக்கின் மேலதிக விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 9ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
