உக்ரைனின் கிழக்கு கார்கிவ் நகரில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ரஷ்யா ஷெல் வீச்சு தாக்குதல் நடத்துகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவின் ஷெல் வீச்சுகளால் 21 பேர் பலியானதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் 112 பேர் காயமடைந்துள்ளனர்.
7 நாட்களாக ரஷ்யா உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இதுவரையில் 400 பேர் வரையில் கொல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
