tamilnewsline

22 இந்திய மீனவர்கள் கைது

file photo

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அவர்களது 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


கைதான இந்திய மீனவர்கள் காங்கேசந்துறை துறைமுகத்துக்கு அழைத்துவரப்பட்டு, கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


இந்த மாதம் 50க்கும் அதிகமான இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டனர்.


அண்மையில் அவர்களில் 21 பேர் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version