நாட்டில் டொலர் பிரச்சினையை தீர்ப்பதற்காக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அரசாங்கத்திடம் சில யோசனைகளை முன் வைத்துள்ளார்.
இதன்படி,
1) நிறுவனங்களில் நாள் ஒன்றில் வேலை செய்கின்ற மணித்தியாலங்களின் அளவை கூட்டுவது (காலை 7:30 – மாலை 5:30)
2) வாராந்த வேலை நாட்களை 4 ஆக குறைத்தல்.
3) தனித்தனி வாகனங்களுக்கு பதிலாக பொது போக்குவரத்தை பயன்படுத்த தூண்டுதல்.
4) சிக்கனமாக எரிபொருளை பாவிப்பதற்கு ஊடகங்கள் ஊடாக பொதுமக்களை தெளிவுபடுத்தல்.
ஆகிய பரிந்துரைகளை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் முன்வைத்துள்ளார்.
