கண்டி வத்துகாமம் – மடவளை பகுதியில் மண்மேடு சரிந்ததில் மூவர் உயிரிழந்தனர்.
இதேவேளை ஒருவர் காயமடைந்த நிலையில் கட்டுகஸ்த்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாரிய மண் மேடு ஒன்று சரிந்து விழாமல் இருக்கும் வகையில், பாதுகாப்பு சுவர் ஒன்றை எழுப்ப அத்திவாரம் இட்ட வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
