வடக்கு – கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் திடீர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் வியாழக்கிழமை காலை இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சீ. வி. விக்னேஷ்வரன், எம். ஏ. சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இராசமாணிக்கம் சாணக்கியன் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
வடக்கு – கிழக்கில் இடம்பெறும் காணி சுவீகரிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
