ரஷ்யாவின் எறிகணைத் தாக்குதலில் 70 படையினர் பலி

4 years ago
World
(112 views)
aivarree.com

ரஷ்யா, உக்ரைனின் ஒக்ட்ரியார்க்கா நகரில் உள்ள படைத்தளம் ஒன்றின் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.


கியவ் மற்றும் கார்க்கிவ் நகரங்களுக்கு இடையில் இந்த பகுதி அமைந்துள்ளது.


இதில் குறைந்தபட்சம் 70 உக்ரைனிய படையினர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அரசாங்கம் அறிவித்துள்ளது.


இதனை அடுத்து தலைநகர் கியவில் வான்வழி தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.