மூன்றாவது தடுப்பூசி / போலி தகவல் பரப்பும் 8 குழுக்கள் / புலனாய்வு விசாரணை

4 years ago
Sri Lanka
(105 views)
aivarree.com

இலங்கையில் தற்பொழுது கொவிட் தடுப்புக்கான மூன்றாவது தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.

ஆனால் இதற்கு பொதுமக்கள் மிகப்பெரிய அளவுக்கு ஆர்வம் காட்டவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த மூன்றாவது தடுப்பூசிக்கு எதிராக போலியான கருத்துக்களை/தகவல்களை பரப்புகின்ற 8 குழுக்களை அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவற்றில் அடிப்படைவாத மதம் சார்ந்த 3 குழுக்களும் அடங்குவதாக கூறப்படுகிறது.

இந்த குழுக்கள் தொடர்பான புலனாய்வு விசாரணை நடத்தும் அரச புலனாய்வு பிரிவு, அதன் அறிக்கையை அடுத்தவாரம் காவல்மா அதிபருக்கு கையளிக்கவுள்ளது.

#ஞாயிறு லங்காதீப