மீண்டும் மறுப்பு செய்தியை வெளியிட்ட மத்திய வங்கி ஆளுநர்

4 years ago
Sri Lanka
(152 views)
aivarree.com

கடன் மீள் கட்டமைப்புக்காக இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தையை நடத்தப் போவதில்லை என்று மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றை இட்டுள்ள அவர், சில செய்தி முகவர்கள் (ரொய்ட்டர்ஸ்) தெரிவிப்பதைப் போன்று இன்னும் சில வாரங்களில் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளை இலங்கை பிரதிநிதிகள் சந்திக்கின்றமை, கடன் மீள் கட்டமைப்புக்காக அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னரும் பல தடவைகள் அவர் இவ்வாறு மறுப்பு செய்திகளை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதை அஜித் நிவாட் கப்ரால் தொடர்ந்தும் எதிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.