Aivarree

மிச்செல் பெச்லெட் அம்மையாரின் அறிக்கை / ஏப்ரல்21 தாக்குதல் குறித்து கேள்வி

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்லெட் அம்மையார் முன்வைக்கவுள்ள அறிக்கையின் பிரதி கடந்த திங்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் பயங்கரவாத தடை சட்டத்தின் நீக்கம் குறித்து சுட்டிக்காட்டப்பட்டிருப்பதுடன், புதிதாக ஏப்ரல்21 தாக்குதல் தொடர்பான விசாரணையின் நிலை தொடர்பாகவும் கேள்வி எழுப்பி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும் முதன்முறையாக, சட்ட மா அதிபரை சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்ற வலியுறுத்தல் இந்த அறிக்கையில் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைக்கான தமது பதிலை இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

#சண்டேடைம்ஸ்

Exit mobile version