திங்கட்கிழமை நள்ளிரவுடன் பேருந்து பயண கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளன.
எரிபொருள் விலை உயர்வு காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு மத்தியில் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பேருந்து கட்டணங்கள் எந்த அளவுக்கு அதிகரிக்கும் என்பது சம்பந்தமான விபரங்கள் அடங்கிய அமைச்சரவை பத்திரம் ஒன்று திங்கள் அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படும்.
அதன் பின்னர் பேருந்து கட்டண விபரங்கள் வெளியிடப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
