tamilnewsline

பிரபாகரன் இருந்தால் நாடு நன்றாக இருக்கும்/ சிங்கள மக்கள் கருத்து (VIDEO)

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் பதிவு செய்யப்பட்ட பிரபாகரன் பற்றிய டிக்டொக் காணொளி ஒன்று வைரலாகியுள்ளது.

அரசாங்கத்தின் மீது விரக்தியுற்றுள்ள சிங்கள மக்கள் சிலர், விடுதலைப்புலிகளின் தலைவர் “பிரபாகரன் இருந்திருந்தால் நாட்டை சிறப்பாக ஆட்சி செய்திருப்பார்” என்று கூறுகின்றனர்.

“பாதுகாப்பு நீக்கப்பட்டால் பிரபாகாரன் செய்ததை நாங்கள் செய்வோம்” என்று இன்னொருவர் கூறுகிறார்.

“நாட்டை முன்கொண்டு செல்ல முடியாவிட்டால் பாதுகாப்பை நீக்குங்கள் பிரபாகரன் செய்ததை நாங்கள் ஒன்றிணைந்து செய்வோம்” எனவும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அரசாங்கத்தின் மீது சிங்கள மக்கள் கொண்டுள்ள விரக்தியையே இது காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

உடனடி செய்திகளுக்கு எமது வட்சப் குழுவில் இணையுங்கள் (Click here)

Exit mobile version