tamilnewsline

பாப்பரசரை சந்திக்கும் கர்தினால் மெல்கம் ரஞ்சித்

இலங்கையின் கத்தோலிக்க பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, பரிசுத்த பாப்ரசர் இரண்டாம் ஃப்ரான்ஸிஸை வத்திகானில் சந்திக்கவுள்ளார்.

ரோம் நேரத்தின்படி திங்கட்கிழமை முற்பகல் 11 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

ஈஸ்ட்டர் தாக்குதல் விசாரணைகள் மீது அதிருப்தி கொண்டுள்ள பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெறவிருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

இதன் ஒரு கட்டமாகவே அவர் பாப்பரசரை சந்திப்பதாக, ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.

Exit mobile version