இலங்கை – கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த ஒருவர் தமிழக காவல்துறையினரால் தேடப்படுகிறார்.
அவரது படகு ஒன்று அண்மையில் ராமநாதபுரம் கரையில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
இதனை அடுத்து அவர் கிளிநொச்சியிலிருந்து தமிழகம் சென்று தலைமறைவாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
அவரது ஆள் அடையாளங்கள் எவையும் இதுவரையில் வெளிப்படுத்தப்படவில்லை.
எனினும் அவரை விரைவாகத் தேடிக் கண்டுபிடிப்பதற்கான பணிகளைத் தமிழக காவல்துறையினர் புலனாய்வு பொறிமுறைகள் ஊடாக ஆரம்பித்துள்ளதாக அறியக்கிடைக்கிறது.
#த ஹிந்து
