ஜெனீவா அமர்வு நெருங்கும் நிலையில் அமைச்சு இல்லாது செய்யப்பட்ட சிறைச்சாலை முகாமைத்துவ மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு மீளுருவாக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதியில் வெளியிடப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் மற்றும் ஜனாதிபதி செயலணியுடன் இணைந்து, பல்வேறு கடமைகளை செய்வதற்கான ஆணை இந்த வர்த்தமானி ஊடாக குறித்த இராஜாங்க அமைச்சுக்குப் பகிரப்பட்டுள்ளது.
எனினும் இந்த இராஜாங்க அமைச்சு பொறுப்புக்கு நியமிக்கப்படவுள்ளவர் குறித்த விபரங்கள் இன்னும் வெளியாக்கப்படவில்லை.
