பல்வேறு சேவைகளை கட்டாய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
மின்விநியோகம், வைத்தியசாலைகள், சிகிச்சையகம், மருந்தகங்கள் மற்றும் அதுபோன்ற ஏனைய நிறுவனங்களில் நோயாளர் பராமரிப்பு, வரவேற்பு, உபசரிப்பு மற்றும் சிகிச்சை உள்ளிட்ட பணிகள் அனைத்தும் அத்தியாவசிய பணிகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
