Aivarree

சிவகரனிடம் TID 5 மணி நேரம் விசாரணை

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன், பயங்கரவாத தடுப்பு பிரிவின் கொழும்பு – கிருலப்பனை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (18) சுமார் 5 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் கடந்த 10 ஆண்டுகளில் நடத்திய போராட்டங்கள் , கூட்டங்கள் தொடர்பிலும் விசாரணை இடம்பெற்றது.

தாம் இவ்விதமாக மூன்று மாதத்திற்கு ஒரு தடவை விசாரணையை எதிர் கொள்வதாகவும் எமது ஜனநாயக ரீதியான செயற்பாட்டை சவாலுக்குட்படுத்த முனைவது நீதியான ஜனநாயக சட்ட ஆட்சிக்கு உகந்தவையாக தெரியவில்லை என உணர்கிறோம் எனவும் சிவகரன் கூறினார்.

Exit mobile version