Aivarree

சம்பிக்க மீதான வழக்கின் அடிப்படை ஆட்சேபனை நிராகரிப்பு

இராஜகிரிய விபத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஜூன் மாதம் 17ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான வழக்கின் ஆரம்ப ஆட்சேபனைகளை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று நிராகரித்த நிலையில் இவ்வாறு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வாகனத்தை கவனக்குறைவாக செலுத்தி நபரொருவருக்கு காயங்களை ஏற்படுத்தியமை உள்ளிட்ட காரணங்களின் கீழ் சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version