சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் கொழும்பில் தற்போது இடம்பெற்று வருகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து மக்கள் தங்களது போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக கொழும்பு வந்திருப்பதாக அந்த கட்சி கூறுகிறது.
‘நாட்டின் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்திய அரசாங்கம் தேவையில்லை’ என்று போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்கள் வலியுறுத்தினார்கள்.
இந்த போராட்டத்தினால் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
