கொவிட் சடலங்களை இனி எங்கும் அடக்கம் செய்யலாம்

4 years ago
Sri Lanka
(114 views)
aivarree.com

கொவிட் நோயினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இனி நாட்டிலுள்ள எந்தவொரு மயானத்திலும் அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இதற்கான அனுமதி வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்19 ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி Aivarree செய்திகளுக்கு தெரிவித்தார்.

இது தொடர்பான விசேட சுற்றறிக்கை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

சட்டவைத்திய நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகள் மற்றும் தற்போதைய தேவைகளைக் கருத்தில் கொண்டு சடலங்களை இனி எந்தவொரு மயானத்திலும் அடக்கம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது.