Aivarree

கைத்தொழில் 2022: தேசிய கைத்தொழில் கண்காட்சி இன்று ஆரம்பம் 

File photo

FILE PHOTO

கைத்தொழில் 2022: தேசிய கைத்தொழில் கண்காட்சி இன்றையதினம் (03) பிரதமர் மகிந்தராஜபக்ஷ மற்றும் கைத்தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்படுகிறது.


பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று ஆரம்பமாகும் இந்த கண்காட்சி, எதிர்வரும் 7ம் திகதி வரையில் தொடரும்.


இதில் முன்னணி 20 கைத்தொழில்துறையினரின் உற்பத்திகள் 300க்கும் மேற்பட்ட நிலையங்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளன. 


இதன்மூலம் பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்க எதிர்பார்க்கப்படுகிறது. 

Exit mobile version