இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்கள் சிலர் தமிழக முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலினை சந்தித்துள்ளனர்.
ஜீவன் தொண்டமான், செந்தில் தொண்டமான் மற்றும் ரமேஸ்வரன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் பேசிய அவர்கள், கச்சதீவு உடன்படிக்கையின் விளைவாகவே தமிழக மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இருபுறமும் மீனவர்களின் வாழ்க்கை நிம்மதியற்று உள்ளது.
அப்போது போடப்பட்ட ஒப்பந்தம் முறையாக இல்லைஎன்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம், என்றனர்
