tamilnewsline

ஓய்வு பெற்றதும் சுரங்க லக்மால் எடுத்த முடிவு

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சுரங்க லக்மால் இங்கிலாந்து கவுன்டி போட்டிகளில் விளையாடவுள்ளார்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் முக்கிய கழகங்களில் ஒன்றான டெர்பிஷயருடன் அவர் இணைந்து கொண்டார்.

இரண்டு ஆண்டுகளுக்கு அவர் அந்த கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சுரங்க லக்மால் நேற்று ஓய்வை
அறிவித்திருந்தார்.

இதன்படி அவர் இந்திய அணியுடனான தொடருடன் ஓய்வு பெற்று, பெர்பிஷர் கழகத்துடன் இணைவார்.

Exit mobile version