tamilnewsline

ஒரு மின்னுற்பத்தி நிலையத்தினால் 600 மில்லியன் நட்டம்

file photo

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் அரசாங்கத்திற்கு சொந்தமான சிறிய மின்முனையம் டீசல் மாத்திரம் பயன்படுத்தப்பட்டு இயக்கப்படுவதனால் அரசாங்கத்திற்கு நாளாந்தம் 20 மில்லியன் ரூபாவும் மாதாந்தம் 600 மில்லியன் ரூபாவும் நட்டம் ஏற்படுகிறது.

உலை எண்ணெய் மற்றும் டீசல் என்பன பயன்படுத்தப்பட்டு குறித்த மின்முனையம் இயக்கப்பட்டால் இந்த நட்டத்தை தவிர்க்கலாம்.

ஆனால் அங்கு டீசல் மாத்திரம் பயன்படுத்தப்படுவதால் இந்த நட்டம் ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version