ஃபிஃபா தலைவர் ஜியான்னி இன்ஃபண்டினோ, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (80) உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றியாளருக்கு கோப்பையை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
இறுதிப் போட்டி ஜூலை 19 அன்று நியூ ஜெர்சியின் மெட்லைஃப் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
இதுவரை எந்தப் போட்டியிலும் கலந்துகொள்ளாத ட்ரம்ப், இறுதிப் போட்டிக்கு முன்னதாகவும் தோன்ற வாய்ப்புள்ளது.
கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறும் இந்த உலகக்கோப்பையின் 104 போட்டிகளில் 78ஐ அமெரிக்கா நடத்துகிறது.
இன்ஃபண்டினோ ட்ரம்ப்பின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிபரின் பணிநேரம் காரணமாக இதுவரை அவர் போட்டிகளை காணவில்லை என்று வெள்ளை மாளிகையின் உலகக்கோப்பை பணிக்குழு இயக்குனர் ஆண்ட்ரூ கியூலியானி தெரிவித்தார்.
சமீபத்தில் என்பிஏ (NBA) இறுதிப் போட்டியில் கலந்துகொண்ட ட்ரம்ப், நியூயார்க்கில் எதிர்க்குரல்களைச் சந்தித்தார்.
மேலும், கடந்த கோடையில் மெட்லைஃப் ஸ்டேடியத்தில் கிளப் உலகக்கோப்பையை வழங்கியபோது, கோப்பையை வழங்கிவிட்டு மேடையை விட்டு வெளியேறாமல் அங்கேயே தங்கியதால் குழப்பம் ஏற்பட்டது. இது குறித்து செல்சி வீரர் ரீஸ் ஜேம்ஸ் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
