ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் இந்த மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவிற்கான விஜயத்தை நிறைவு செய்து அவர் இலங்கை வருவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கான விஜயத்தின் பின் ஈரான் வெளிவிவகார அமைச்சர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்கிறார்.
ஈரானுக்கு எரிபொருளுக்காக தேயிலையை வழங்குவதற்கு இலங்கை இணங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
