Aivarree

இலங்கைக்கு உதவ தயாராகும் IMF

இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) உறுதிப்படுத்தியுள்ளது.

அதன் பேச்சாளர் கெரி ரைஸ் இதனைத் தெரிவித்துளளார்.

‘இலங்கை அதிக பணம் அச்சிட்டமை காரணமாக பெரும் பண வீக்கத்தையும் நாணய பெறுமதி இறக்கத்தையும் அடைந்துள்ளது.

இதில் இருந்து மீள இலங்கைக்கு உதவக்கூடிய சிறிந்த வழிகள் குறித்து சர்வதேச நாணய நிதியம் ஆராய்ந்து வருகிறது.

இதற்கான பேச்சுவார்த்தைகளை IMF அதிகாரிகள் ஆரம்பிக்கவுள்ளதுடன், நிதி அமைச்சர் அடுத்தமாதம் வொசிங்கடன் விஜயம் செய்யவுள்ளார்’ என்று கெரி ரைஸ் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version