இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபைக்குத் (BCCI) தலைவராக இருப்பது, இந்திய கிரிக்கட் அணிக்குத் தலைவராக இருப்பதை விட சுலபமானது என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
முன்னாள் இந்திய அணித் தலைவரான கங்குலி, இந்திய அணிக்குத் தலைவராக இருப்பது மிகவும் சவாலானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கொவிட் நிலைமை கடந்த 18 மாதங்களை கடினப்படுத்திவிட்டது.
ஆனால் பெரும் கிரிக்கட் தொடர்களை இந்தியாவில் நடத்த முடிந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது, என்றார் கங்குலி.
