tamilnewsline

இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) புதிய அணி பெயர் வெளியானது.

2022 இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) பதிப்பில் அகமதாபாத் அணி குஜராத் டைட்டன்ஸ் என்ற பெயரில் அழைக்கப்படும்.

இந்த அணிக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தலைவராக செயற்படுவார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா பயிற்சியாளராக இருப்பார்.

ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் மற்றும் இளம் இந்திய துடுப்பாட்ட வீரர் சுப்மான் கில் ஆகியோரும் அணி உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விக்ரம் சோலங்கி கிரிக்கெட் பணிப்பளராகவும், கெரி கிர்ஸ்டன் டைட்டன்ஸ் அணியின் ஆலோசகராகவும் துடுப்பாட்ட பயிற்சியாளராகவும் செயல்படுவார்.

Exit mobile version