Aivarree

இசைஞானி உடன் இணையும் டிஎஸ்பி

இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி சென்னையில் மார்ச் 18 ஆம் திகதி தீவு திடலில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் இளையராஜாவுடன் பிரபல இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இணைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இளையராஜா மற்றும் தேவிஸ்ரீபிரசாத் இருவரும் முதல் முறையாக இணைந்து நடத்தவுள்ள முதல் இசை நிகழ்ச்சி இதுவாகும்.

அத்துடன், இந்த இசை நிகழ்ச்சியில் ஒரு சில பிரபல இசையமைப்பாளர்கள் மற்றும் பல பிரபல பின்னணி பாடகர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version