அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பகுதியில் மின்சாரம் தாக்கி 2 சிறார்கள் உயிரிழந்தனர்.
சம்மாந்துறை – நைனாகாடு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 வயதான சகோதரர்களாவர்.
விலங்குகளுக்காக போடப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கிய நிலையிலேயே அவர்கள் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
