ரஷ்யா மற்றும் உக்ரைன் விடயத்தில் இலங்கை நடுநிலை வகிக்கும் என வெளிவிவகார செயலாளர் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே அறிவித்துள்ளார்.
அங்குள்ள நிலைமைகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.
நாட்டிற்கு வர வேண்டியவர்களை திருப்பி அழைத்துவருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பெலாரஸில் உள்ள இலங்கை மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, என்றார்.
