Aivarree

மருத்துவம் செய்யாமல் பிரார்த்தனையில் ஈடுபட்ட பெற்றோர் / மகன் மரணம்

கடும் தடிமன் மற்றும் காய்ச்சலால் 10 வயது சிறுவன் பாதிக்கப்பட்டிருந்தார்.

அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாமல் கடவுள் பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள்.

இதனால் அவர் உயிரிழந்தார்.

கம்பஹா,படால்கமவில் கடந்த 07ம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக தந்தை, தாய் மற்றும் பாட்டி கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் மருத்துவ சிகிச்சைகளை நம்பாத மத நம்பிக்கையை பின்பற்றுகின்றவர்கள் என தெரியவந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version