Aivarree

மகனை கடத்திய (?) தந்தை – காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் பலி

ஹொரனை – கந்தன பகுதியில் தமது பாட்டியின் வசம் இருந்த 7 வயதான மகனை தந்தை ஒருவர் புதன்கிழமை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டு, சிறுவனின் பாட்டியை அச்சுறுத்தி அவர் தமது மகனை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

‘ஹொரன நீலக்க’ என்ற பாதாள உலகக்குழு உறுப்பினர் ஒருவரே இவ்வாறு தமது மகனை கடத்திச் சென்றதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

கடத்தப்பட்டதாக கூறப்படும் சிறுவனைத் தேடிச் சென்ற காவல்துறைக்கும், ஹொரண நீலக்கவுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கி மோதலில், சிறுவனின் தந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் சில தினங்களுக்கு முன்னர் தமது மனைவியின் கரங்களை வெட்டியதாகவும், அதனால் அவர் தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தின் விரிவான பின்னணி இன்னும் தெரியவரவில்லை. தகவல் கிடைத்ததும் பதிவேற்றப்படும்

எமது வட்சப் குழுவில் இணையுங்கள் – https://chat.whatsapp.com/DzIgQk7SDjJJVFUqb6BU8w

Exit mobile version