பிரதமரின் தேர்தலுக்கான சவாலை ஏற்கத் தயாராக இருப்பதாக இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கூறியுள்ளது.
தேர்தல் தோல்விக்கு அஞ்சி தீர்மானம் எடுக்கவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறிய கருத்துக்கு பதில் வழங்கும் வகையில் அக்கட்சியின் ஊடக பேச்சாளர் எஸ்.எம் மரிக்கார் இதனை கூறினார்.
தாமதமின்றி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடாத்துமாறும் சவால் விடுத்துள்ளார்.
இதேவேளை மொட்டு அணியின் பேரணி இடம்பெற்ற அனுராதபுரத்திலேயே தமது கட்சி பேரணியொன்றை நடத்தவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
