வத்தளை பிரதேசத்தில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேலியகொடை காவல் பிரிவில் குற்றத்தடுப்பு பிரிவினர் வியாழன் அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவ்வாறு 52 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 2.5 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் வத்தளைப்பகுதியை சேர்ந்தவர் என காவல்துறை தெரிவிக்கிறது.
