ரஷ்யாவின் தாக்குதல்களில் இதுவரை குறைந்தது 137 உக்ரைன் குடிமக்கள் (சிப்பாய்கள் மற்றும் பொதுமக்கள்) கொல்லப்பட்டனர்.
உக்ரேனிய ஜனாதிபதி இதனை அறிவித்துள்ளார்.
உலகின் மிக மோசமான அணுசக்தி பேரழிவின் வளாகமான செர்னோபில்லின் கட்டுப்பாட்டையும் ரஷ்யா கைப்பற்றியது.
ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பு தேடி அண்டை நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர்.
வங்கிகள் மீதான சொத்து முடக்கம் உட்பட ரஷ்யா மீதான புதிய பொருளாதார தடைகள் நடைமுறைக்கு வருகின்றன
வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தலைநகர் கியவில் மக்கள் நிலத்தடி முகாம்களில் இரவைக் கழித்துள்ளனர்.
