உக்ரைன் – கார்கிவ் பகுதியில் ரஷ்யா நடத்திய எறிகணை தாக்குதலில் இந்திய பிரஜை ஒருவர் பலியானார்
இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தமது டுவிட்டர் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளார்
உக்ரைனில் கல்வி நடவடிக்கைகளுக்காக சென்ற மாணவன் ஒருவரே குறித்த தாக்குதலில் பலியானார்
அவரின் குடும்பத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சு இரங்கல் வெளியிட்டுள்ளது
உக்ரைன் – ரஷ்யா விடயத்தில் இந்திய நடுநிலை வகித்து வந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
