வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு சட்டரீதியாக வங்கிகள் ஊடாக அனுப்பப்படும் பணத்துக்கு டொலர் ஒன்றுக்கு 10/- ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
இந்தத் தொகையை 38 ரூபாவாக ஏப்ரல் வரை அதிகரித்து வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
ஒரு டொலருக்கான இலங்கை ரூபா பெறுமதி 230 ரூபா நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அதன் கொள்முதல் பெறுமதியுடன் 38/- மேலதிக கொடுப்பனவும் வழங்கப்படும்.
இதன்படி வெளிநாடுகளில் இருந்து வங்கி ஊடாக அனுப்பப்படுகின்ற ஒவ்வொரு டொலருக்கும், 250 ரூபாவுக்கு மேற்பட்ட தொகையை பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
