யுகதனவி உடன்படிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டன.
இந்த மின் மையத்தை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கு எதிராக இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அவற்றை விமல் வீரவன்ச போன்ற முன்னாள் அமைச்சர்கள் ஆதரித்திருந்தனர்.
இவை இன்று பரிசீலனைக்கு வந்தபோது, அவற்றை விசாரணைக்கு எடுக்க காலம் ஒதுக்க முடியாது என உயர் நீதிமன்றம் அறிவித்தது.
