வடக்கு – கிழக்கு கடல்பரப்பு கொந்தளிப்பு/ எச்சரிக்கை

4 years ago
Sri Lanka
(63 views)
aivarree.com

வடக்கு, வடகிழக்கு, கிழக்கு, தென் கிழக்கு ஆகிய ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகள் வரும் 48 மணித்தியாலத்துக்கு கொந்தளிப்பு நிலையில் காணப்படும்.

இலங்கையின் தென்கிழக்கு திசையில் உருவாகியுள்ள தாழமுக்க நிலையால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் மன்னார் முதல், காங்கேசந்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடலில் பயணிக்க வேண்டாம் என மீனவர்கள் மற்றும் கடலோடிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.